யாழில் இடம்பெற்ற சோக சம்பவம் ஒரே நாளில் மூவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் எரிந்த வீட்டில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, குளத்திலிருந்து சடலமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாளில் ஒரே பகுதியில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.