யாழில் வீடொன்றில் 16 பவுண் நகைளை கொள்ளையிட்ட நபர்கள் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராயில் வீடுடைத்து 16 பவுண் நகைள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த 17 ஆம் திகதி அன்று இருபாலையில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் உள்ள ஆசிரியர்கள் இருவரும் வீட்டில் இல்லாத வேளை கதவினை உடைத்து வீட்டில் இருந்த  16 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டன.

குறித்த திருட்டு சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சந்தேக நபர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளும் மீட்க்கப்பட்டன. நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த  24 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டனர் கைதானவர்கள் நீண்டநாளாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு போதைக்கு அடிமையானவர்கள் என்பதுடன் போதைப்பொருள் வாங்குவதற்க்காகவே திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என கூறியுள்ளனர்