யாழ் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு அதற்க்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது இதனிடையே காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த கப்பலில் 120 பயணிகள் பயணிப்பார்கள் எனவும் அவர்கள் 100 கிலோ பொருட்களை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு ஒருவருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபா வரிக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது என்றும் கூறப்படுகின்றது