யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம்.!

யாழ் போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீளவும் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.