போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைந்த இருவர் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற வெளிநாட்டவர்கள் இருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மொழிப் பிரச்சினை

துபாயில் இருந்து ஃப்ளை துபாய் விமானத்தில் வந்த அவர்கள் 39 மற்றும் 36 வயதுடைய ஏமன் மற்றும் சாட்  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தடுமாறியுள்ளமை தெரியவந்துள்ளதுடன்,  ஆய்வின் போது சாட் மற்றும் ஏமன் நாடுகளில் இருந்து வழங்கப்பட்ட உண்மையான கடவுச்சீட்டுகளும் கிடைத்துள்ளன.