உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள திருமதி துஷாரி ஜெயக்கொடி நேற்று முன்தினம் (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.

உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை (21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

திருமதி துஷாரி ஜெயக்கொடி அண்மையில் இலங்கையில் நடைபெற்ற திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள துஷாரி ஜெயக்கொடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.