யாழில் சிறுவர்களை கடத்த முயன்ற நபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்று காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

சமபவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

அதேவேளை நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் தொடர்பாக பல செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில் , இன்று காலை யாழில் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.