பிரான்சில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும் பாதாள உலக சுற்றவாளி குடு அஞ்சு

பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி குடு அஞ்சு நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு , இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பொலிஸாரால் ஆவணங்கள் ஆராய்ந்த பின்னர் குடு அஞ்சுவை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டியலிடப்பட்ட குற்றங்கள்

குடு அஞ்சு இதுவரை செய்த குற்றங்கள், டுபாய், பிரான்சில் தங்கியிருந்து செய்த குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தையும் பிரான்ஸ் அரசுக்கு தெரிவிக்கவும் இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இலங்கை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகள் மற்றும் அஞ்சுவின் போதைப்பொருள் தொடர்பான வழக்கு அறிக்கைகள் உட்பட பிரான்சஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குடு அஞ்சு தொடர்பில் பிரான்ஸுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, எதிர்வரும் ஒரு சில வாரங்களில் போதைப்பொருள் குடு அஞ்சுவை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.