யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள்

யாழ்.தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் மாணவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் வீட்டில் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மன நோயால் பாதிக்கப்பட்டவர்
சமபவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவனின் தந்தையார் தெரிவிக்கையில், தனது மகனை என்ன காரணத்துக்காக குறித்த ஆசிரியர் அழைத்தார் என தனது மகனுக்கு தெரியாது எனவும், ஆசிரியர் திடீரென கைகளால் முகம் தலைப் பகுதிகளை தாக்கியதாக தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஆசிரியர் மன நோயால் பாதிக்கப்பட்டவர் என தான் அறிந்ததாகவும் இவ்வாறான ஆசிரியரை பாடசாலையில் வைத்திருப்பது ஏனைய மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் .

எனவே மனநோய் உள்ள ஆசிரியர் ஒருவரை பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.