காத்தாடியால் பறிபோன மாணவனின் கை!

மாத்தறையில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவரின் கை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காத்தாடி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையாக சென்றதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, வேரகம்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் மாணவனை வாளால் தாக்கியதாகவும் மாணவனின் வலது கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பாடசாலை மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.