சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொக்லேட்கள் மீட்பு!

நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் சொக்லேட்களை இறக்குமதி செய்து அதனை விநியோகித்திருந்த வீடொன்று சோதனையிட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகளுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் மாவட்ட புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மாவட்ட புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரி கோசல ரங்கநாத் தலைமையில் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதுடன் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.