இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல் நலக் குறைவால் காலமானார்!

  இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல்நலக்குறைவால் 85 ஆவது வயதில் காலமானார்.

கண்டி வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.

மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.