வாழ்க்கை வெறுத்து விரக்தியில் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாறிய பொலிசார்!

தனது வாழ்க்கையே வெறுத்து விரக்கதியின் உச்ச கட்டத்தில் வெலிகம நகரில் தற்கொலை செய்து கொள்வதற்காக அலைந்து கொண்டிருந்த யுவதியின் உயிரைக் காப்பாற்றி அவரின் மனதை தெளிவுபடுத்தி வேலையில் ஈடுபடுத்தும் உன்னத செயலில் ஈடுபட்ட காவல்துறையினரின் செயற்பாடு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

வெலிகம காவல்துறையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த யுவதி நேற்று (26) காலை வெலிகம நகரில் தனது கணவர் தன்னை கவனிக்காததால் வாழ பொருளாதார வசதி இல்லை எனக் கூறி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சுற்றித் திரிந்துள்ளார். 

இது தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

வெலிகம பொலிஸார் அவசர அழைப்புப் பிரிவின் சாந்த மற்றும் விக்ரமாராச்சி ஆகிய இரு உத்தியோகத்தர்களினால் குறித்த இளம் பெண் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

விசாரணையில் தெரிய வந்தவை  

விபத்து தொடர்பான விசாரணையின் போது ​​கணவன் இவரைக் கவனிப்பதில்லை என்பதும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரப் பின்னணியும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் தனது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் அஹங்கம பிரதேசத்தில் இருந்து வெலிகம நகருக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது ஒரே குழந்தையை வீட்டில் விட்டு சென்றது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் பின்னர் வெலிகம தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம்.அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழு, குறித்த இளம் பெண்ணின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் பலம் கொடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதன் பிரகாரம் வெலிகம காவல்துறையினர் அவர் வேலைக்கு செல்லவும், தங்குமிடத்திற்கு தேவையான பணத்தை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் வெலிகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அவரை கண்காணிக்கவும் பொலிஸார் முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.