யாழ் கொடிகாமம் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறு வயது சிறுமி

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

ரி.கின்சிகா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தது கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் அச் சிறுமியை உடனடியாக மீட்டு கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவாழ்க்கை வெறுத்து விரக்தியில் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாறிய பொலிசார்!
Next articleபட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!