யாழில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்படமையால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பகுதியொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் (28-05-2023) பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த 33 வயதான தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Previous articleகிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் காட்சிகள்
Next articleநீர்தேக்க கால்வாயில் தவறி வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு!