யாழில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்படமையால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பகுதியொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் (28-05-2023) பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த 33 வயதான தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.