களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

களுத்துறை விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாரதிக்கு  பிணை

அதேசமயம் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதி என கருதப்படும் நபரை, இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் , அவரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி கடந்த 15ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.