முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறையால் சிரமங்களை எதிர்நோக்கும் நோயாளர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.

மக்கள் கோரிக்கை
அவ்வப்போது மருத்துவர்களை நியமிப்பதும் பின்னர் அவர்களை மாற்றம் செய்வதும் போன்ற நடவடிக்கையினால் மாவட்டத்தில் மருத்துவசேவையினை மக்கள் முழுமையாக இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே இவ்வாறான இடம்மாற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சரியான சேவையினை வழங்கக்கூடிய நிலையில் மாவட்ட மருத்துவமனை இயங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.