யாழ் பல்கலையில் இடம்பெற்ற குருதிக் கொடை நிகழ்வு!

உலக குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 

பெரும்பொருளாளர் திருமதி. டெல்சியா கிறிஸ்டியன் மற்றும் துறைத்தலைவர் கலாநிதி (திருமதி) க.கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டலில், யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்களின் மேற்பார்வையில் நடந்த இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 

அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவ, மாணவியர் இன, மத, மொழி பேதமின்றி இந்த நிகழ்வில் கலந்துகொண்டமையும், இதன்போது அரிய வகை குருதியினங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.