யாழ் பிரபல பாடசாலை மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்

யாழ்.சாவச்சேரி இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த மாணவர் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஆசிரியரின் தாக்குதலில் தலையிலும் முகத்திலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவிக்கப்படவில்லை

எனினும்  பாடசாலை அதிபரின் தலையீட்டால் வைத்தியசாலை நிர்வாகத்தின் துணையுடன் , பாதிக்கபப்ட்ட  மாணவனை வெள்ளிக்கிழமை மாலையே வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாது குறித்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாவச்சேரி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.