நாட்டில் அரிசி இறக்குமதிக்கான தேவை இல்லை!

அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பில் தெரிவித்தது

கொழும்பு, புறக்கோட்டையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் வரையில் அவசியமான அரசி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதற்காக அரிசியை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுகிறது என தேசிய கமநல சேவை ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.