யாழில் ரயிலில் மோதுண்டு முதியவர் உயிரிழப்பு!

யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வயோதிபர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரை உயிரிழந்துள்ளார்.