கட்டுநாயக்க விமான நிலையத்தில்  யாழ் இளைஞர்கள் நால்வர் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரர் என்றும் ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்தபோதே குறித்த  இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம்  ஒப்படைப்பு

இந்த இளைஞர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.