கல்வியங்காடு கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த 6 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர், கோப்பாய் பகுதியில் உள்ள சிறுமி ஒருவருடன் முறையற்ற விதத்தில் நடத்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அவரை சிலர் தாக்கி கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.