வீடொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.