குளத்தில் குதித்த தாய் மற்றும் குழந்தையின் சடலம் மீட்பு!

தாய் ஒருவர் தனது 10 மாத மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசித்து வந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது 10 மாத மகளுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண், தானும் குழந்தையும், தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தின் அருகே வைத்துவிட்டு இன்று (23) காலை தனது சிறு குழந்தையுடன் குளத்தில் குதித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தில் தாய் மற்றும் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleயாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்
Next articleமலை உச்சியில் மர்மமாக உயிரிழந்த பெண்!