நாளைய நாள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் நாளை (25) மனித உடலால் உணரப்படும் வெப்பம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் வெப்ப நிலை நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே , மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.