ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று நண்பகல் 12.00 மணி முதல் மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா  கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.