அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு!

  அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதுடன்  ,சம்பவத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் அவர்கள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.