நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) நடைபெறுகிறது.

லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி களம் இறங்கும் இலங்கை அணி 2 போட்டிகளில் தோல்வி கண்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்பது அனைத்து இலங்கை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.