லெபனானில் கட்டிட இடிபாட்டில் சிக்கிய இலங்கைப்பெண் உயிரிழப்பு!

 லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்

லெபனானில் உள்ள பெரூப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இடிபாட்டில் இலங்கை பெண் உள்ளிட்ட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, மிரிஸ்வத்தையில் வசிக்கும் 65 வயதுடையவர் என தெரிவித்த காமினி செனரத் யாப்பா, தூதரகத்திடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், உரிய தரப்பினருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் கூறினார்.