யாழில் திடீர் நடைபவனி!

யாழ். திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைப்பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (19) காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைப்பயணத்தில் ஈடுபட்டனர்.

இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

திருநர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையால் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.