யாழில் விடுதலைப்புலிகளின் உடையில் வந்த சிறுவர்களுக்கு சிக்கல்!

யாழ்ப்பாணத்தில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வில், விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

சமூக வலைத்தளங்களில் வைரல்

இந்நிலையில் சிறுவர்கள் அந்த ஆடை அணிந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீரவிசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர்.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.