யாழில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பதற்றம்!

  யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதாக கூறப்படுகின்றது.

கரைக்கு வந்த  மர்மப்பொருள்

கரைக்கு வந்த பொருளில் Asia 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏதாவது கப்பலில் இருந்து அது தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்

அதேவேளை அண்மைக்காலமாக உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில், ஆகிய பகுதிகளில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.