கச்சதீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

யாழ்ப்பாணம் கச்சத்தீவிற்கு, யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பங்குனிமாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த அதிகாரிகள் அங்குப் களவிஜயம் செய்துள்ளனர். இந்த விஜயத்தில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன், கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.