யாழில் விபரீத முடிவெடுத்த 21 வயதான யுவதி!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் நேற்றைய தினம் (26-01-2024) தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான தேவதாஸ் கிருபாஜினி என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.