வவுனியாவில் கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு முன்னால் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறியதால் பதற்றநிலை காணப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியதை தொடர்ந்து அவர் மரத்திலிருந்து கீழ் இறங்கியிருந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மூன்று தினங்களாக அலைக்கழிப்பு
திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51வயதுடைய அநுரகுமார என்பவர் கடந்த மூன்று தினங்களாக வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்து சென்றுள்ளார்.

எனினும் தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என கூறி போராட்டம் நடத்தியிருந்தார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில்

தனக்கு காலில் நோய் ஒன்று இருப்பதாகவும் நீண்ட நேரம் தன்னால் நிற்க முடியாது எனவும் இருந்தும் கடவுச்சீட்டு பெறுவதற்காக கடந்த மூன்று தினங்களாக இவ்விடத்திலேயே தினமும் நிற்பதாவும் ஆனாலும் சில மாபியா குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தாம் வரிசையில் நின்று இடங்களை பெற்று விற்பனை செய்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். அதோஅடு அந்த மாபியாக்களுக்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச விடுதியில் சமூக சீர்கேடான விடயங்கள்
அதேசமயம் கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துள்ள பிரதான வீதி ஒடுங்கிய வீதி என்பதால் வீதியின் இரு பகுதியிலும் வாகனங்கள் தரித்து நிற்பதுடன் புதிது புதிதாக கொட்டகை வியாபார நிலையங்களும் உருவாக்கியுள்ளன

இதானல் அப்பகுதியால் பயணிப்பவர்கள் பெரும் சிரமத்துக்கும் உள்ளாகின்றனர் இது தொடர்பாக பலமுறை பொமக்களால் பொலிஸாருக்கும் உள்ளூராட்சி உதவி அணையாளருக்கும் அறிவித்தல் வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் .

அதோடு சுகாதார பிரிவினரும் கடைக்காரகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டா நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள் எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அரச விடுதி ஒன்றினுள் சமூக சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அது தொடர்பாக முறையிட்டும் எதுவிதமான் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.