சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

இதன்படி, குறித்த புதிய கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக நியமித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை உருவாக்கவுள்ள அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இருப்பினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிப்பது தொடர்பில் தாம் இதுவரையில் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.