தீராத நோய்களையும் தீர்க்கும் அருகம்புல்

உலகத்தில் விலை மதிப்பான அறிய பொக்கிஷ மருந்துகள் எல்லாம் இலைமறை காயாக பண்டைய காலத்திலிருந்தே இயற்கை மருத்துவத்தில் காணப்படுகின்றது. தீராத நோய்களையும் துன்பங்களையும் தீர்க்கும் அருகம்புல் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம் 

அருகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி இயற்கை மருத்துவத்தில் உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.

சக்கரை நோயை குணப்படுத்தும் 

சக்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சக்கரையை குறைக்கும் தன்மையுடையது. பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது.

காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாகிறது.

சளியைக் கரைக்கக் கூடியது

நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்த வல்லது. ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது. கட்டிகளை கரைக்க வல்லது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது.

அருகம் புல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றும்.

கண்பார்வை கூர்மையாகும்

உடல் எடை (கொலஸ்ட்ரால்), சளித் தொல்லை, ஜலதோஷம், இரும்பல், நீர்க்கோவை (உடல் வீக்கம்), வயிற்று வலி, கண்பார்வை கூர்மை, வயிற்றுப்போக்கு அனைத்திற்கும் சிறந்த மருந்தாகும்.

 நரம்பு தளர்ச்சி

ரத்த சோகை, மூக்கில் ரத்த கசிவு, மூளையில் ஏற்படும் ரத்த கசிவு, ரத்த புற்றுநோய் ஆகிய அனைத்து நோய்களும் குணமாகும். சிறுநீர் பையில் உள்ள கல் நீங்க, நரம்பு தளர்ச்சி நீங்க, இதைய கோளாறு குணமாக, தோல் வியாதிகள் குணமாக அருகம் புல் சிறந்த மருந்து.