யாழில் ஒருவயதுக் குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் 14 மாதங்களே நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த 14 மாதங்களே ஆன ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை 2 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்றைய தினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.