போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் மொல்லிகொடவில் உள்ள சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் குறித்த வீட்டில் இருந்த ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் , ஒரு பகுதி அச்சிடப்பட்ட ஐயாயிரம் ரூபாபோலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையின் போது பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு போலி நோட்டுக்களை அச்சிட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இன்று (6) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவுள்ளதாகவும் அதனையடுத்து அவர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.