யாழில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடலில் சட்டவிரோத தொழிலான ஒளி பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்றையதினம்(06) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரே, கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த  23வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.