சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு வாழ்நாள் தடை!

  சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை (29) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாகாநந்த கொடித்துவக்குவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.