ஐ.நாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!!

சதுப்புநில சூழல் அமைப்புகளை புனரமைப்பதிலும் புத்துயிர் பெறவைப்பதிலும் முன்னுதாரணமான பணிகளை முன்னெடுக்கும் நாடாக இலங்கை ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (27) கென்யாவின் நைரோபியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா.சுற்றுச்சூழல் பேரவையில் இந்த விருது வழங்கப்பட்டு இலங்கை கௌரவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டதற்கான விருதினை, இலங்கையின் காலநிலை மாற்ற அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் ஜாசிங்க மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செவ்வந்தி ஜெயக்கொடி ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.