உணவகமொன்றில் தீ விபத்து 40இற்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவகத்திலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சிறுவர்கள் உட்பட 33 பேரின் உடல்கள்

அதோடு உணவகத்திலிருந்து 75க்கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாக்கா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 33 பேரின் உடல்கள் உள்ளதாகவும் நகரின் மற்றுமொரு மருத்துவமனையில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்

20க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தீ விபத்துக்கு எரிவாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.