யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!

     யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.