பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் திடீர் மரணம்!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அநுராதபுரம் நகரிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறிதத நபர் 8ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

84 வயதான அவர் அனுராதபுரம் ஹரிச்சந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம் 

விடுதியில் தங்கியிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு 10.30 மணியளவில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரணத்திற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.