கொழும்பு கோட்டை பகுதியில் போதைப்பொருள் விற்றவர்களும் வாங்கியவர்களும் அதிரடியாக கைது! 

 கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோட்டை பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையின் போது தினமும் போதைப்பொருளை உட்கொள்வதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது போதைப்பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரையும், அவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கிய பல பஸ் ஊழியர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.