ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம் ஆசிரியர்!

 இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக  தெரிவிக்கபப்டுகின்றமை  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரசம்பவம் நேற்று 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கரையோரப் ரயிலில் ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிஅக் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.