யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் இருந்த காணிகள் ஜனாதியால் விடுவிப்பு!

யாழ் – வலிகாமம் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டன. 

குறித்த காணி விடுவிக்கும் நிகழ்வானது, இன்று ( 22.03.2024) யாழ் – அச்சுவேலி வயாவிளான் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. 

கிராம சேவையாளர் பிரிவு

இதன்போது, ஜே – 244 வயாவிளான் கிழக்கு, ஜே – 245 வயாவிளான் மேற்கு, ஜே – 252 பலாலி தெற்கு, ஜே – 254 பலாலி வடக்கு, ஜே – 253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.