இசை நிகழ்வில் மீட்கப்பட்ட தங்கநகை நீதிமன்றில் ஒப்படைப்பு

  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஹரிஹரன் இசை நிகழ்வு அத்து மீறிய ரசிகர்களால் பெரும் கேளேபரத்தில்   முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் இதுவரை காலமும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேளை எவரும் நகை தொலைந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வராத நிலையில் , பொலிஸாரினால் நகை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகையை தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமது நகை தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.